• Download mobile app
16 May 2025, FridayEdition - 3383
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பென்ஷன் பணத்திற்காக தாயின் உடலை ஐந்து மாதங்களாக பாதுகாத்த மகன்கள்

May 24, 2018 தண்டோரா குழு

உத்திரப்பிரதேச மாநிலம் வாரனாசி பகுதியில் துர்காகுண்டம்பகுதியில் வசித்து வந்தவர் அமராவதி தேவி. அவரது கணவர் தயாபிரசாத் கஸ்டம்சில் பணியாற்றினார்.சில ஆண்டுகளுக்கு முன் அவர் இறந்துவிட்டார்.

அவர் இறந்த பிறகு அவராவதி தேவிக்கு பென்ஷன் பணம் வந்துகொண்டிருந்தது.இந்நிலையில், கடந்த ஐந்து மாதங்களுக்கு முன் உடல் நலக்குறைவால் அவர் உயிரிழந்துள்ளார்.ஆனால் அவரது மகன்கள் அமராவதி தேவியின் உடலை சடலம் செய்வதற்கு பதிலாக அவரது உடலுக்கு வேதிப்பொருட்களை பூசி பாதுகாத்துவந்தனர்.

மாதந்தோறும் அமராவதி தேவியின் கையெழுத்தை போலியாக போட்டு பென்ஷன் பணத்தை வாங்கிவந்தனர்.இதற்கிடையில், அமராவதி தேவியின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அவரது பக்கத்து வீட்டினர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.இதையடுத்து, அங்கு வந்த போலீசார் நடத்திய விசாரணையில் அமராவதி தேவி ஐந்து மாதங்களுக்கு முன்பு இறந்ததும் பென்ஷன் பணத்திற்காக அவரது மகன்கள் அவரது உடலை தகனம் செய்யாமல் இருந்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து, அமராவதி தேவியின் உடலை கைப்பற்றி போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சமபவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க