• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பெண் குழந்தைக்கு “ஆம்” என்று பெயரிட்ட பெற்றோர்

March 15, 2017 தண்டோரா குழு

துருக்கியில் பிறந்த பெண் குழந்தைக்கு “ஆம்” என்று அதன் பெற்றோர் பெயரிட்டுள்ளனர்.

குழந்தைகளுக்கு வித்தியாசமான பெயரைப் பெற்றோர் தேடி வைப்பது வழக்கம். ஆனால், துருக்கி நாட்டின் தியார்பகிர் மாகணம் ஏர்கனி மாவட்டத்தில் வசிக்கும் ஒரு தம்பதி தங்களுடைய பெண் குழந்தைக்கு ‘எவட்’ என்று பெயரிட்டனர். அந்த பெயருக்கு துருக்கி மொழியில் ‘ஆம்’ என்று அர்த்தம்.

அந்நாட்டின் அதிபர் தயீப் எர்டோகனின் ஆதரவாளர் முஸ்தபா, அந்நாட்டின் வரவிருக்கும் பொது வாக்கெடுப்புக்கு ஆதரவு அளிக்கும் வகையில் தன்னுடைய மகளுக்கு வித்யாசமான பெயரை வைத்துள்ளார்.

“என்னுடைய மகளுக்கு இப்படிப்பட்ட ஒரு பெயரை வைத்தது குறித்து நான் வருத்தப்படவில்லை” என்று முஸ்தபா கூறினார்.

அதன் தாய் சொங்குல் செலிக் கூறுகையில், “வாக்கெடுப்பின் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்தும் விதமாக இந்த பெயரை முடிவெடுத்தோம். எங்கள் குழந்தை ஆரோக்கியமாகவும் நிலையாகவும் இருக்கிறது” என்றார்.

மேலும் படிக்க