• Download mobile app
03 May 2026, SundayEdition - 3735
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பெண் உதவி ஆய்வாளரிடம் தவறாக நடந்த புகாரில், உதவி ஆணையர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

September 6, 2017 தண்டோரா குழு

கோவையில் பெண் உதவி ஆய்வாளரிடம் தவறாக நடந்த புகாரில், உதவி ஆணையர் ஜெயராமன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கோவை காந்திபுரம் பகுதியில் கடந்த திங்கட்கிழமை நடந்த மாணவர் போராட்டத்தின் போது பணியில் இருந்த பெண் உதவி ஆய்வாளரிடம் , மத்திய சட்டம் ஒழுங்கு உதவி ஆணையர் ஜெயராமன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ காட்சிகள்வாட்ஸ்ஆப் மற்றும்சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதனையடுத்து ஜனநாயக மாதர் சங்கத்தினர் இன்று கோவை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜை சந்தித்து இந்த விவாகரம் குறித்து உதவிஆணையர் ஜெயராமனிடம் சட்ட ரீதியாகவும், துறை ரீதியாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தனர். இதனைத் தொடர்ந்து இந்த வீடியோ காட்சிகள் குறித்து கோவை மாநகர சட்டம் ஓழுங்கு துணை ஆணையர் லட்சுமி உதவிஆணையர் ஜெயராமனிடமும், பெண் உதவி ஆய்வாளரிடமும் விசாரணை நடத்தி வருகின்றார்.

இந்நிலையில் குற்றச்சாட்டுக்கு உள்ளான உதவி ஆணையர் ஜெயராமன் கட்டாய காத்திருப்போர் பட்டியலில் வைக்க டிஜிபி உத்திரவிட்டுள்ளார்.

எனினும், அவரிடம் துறை ரீதியாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கோவை மாந்கர காவல் ஆணையர் அமல்ராஜ் தெரிவித்தார்.துறை ரீதியாக விசாரணைக்கு பின்னரே அவர் மீதான நடவடிக்கை தெரியவரும்.

மேலும் படிக்க