• Download mobile app
16 May 2024, ThursdayEdition - 3018
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பெட்ரோல் டீசல் விலை உயர்வு

January 16, 2017 தண்டோரா குழு

பெட்ரோல் விலை லிட்டருக்கு 42 காசும், டீசல் ரூ.1.03 உயர்ந்துள்ளன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்வதன் விளைவாக அரசு நடத்தும் எண்ணெய் நிறுவனங்கள் விலையை உயர்த்தியுள்ளன.இது திங்களன்று அமலுக்கு வந்தது.

பெட்ரோல், டீசல் விலை அந்தந்த மாநிலங்களின் வரிகளுக்கு ஏற்ப அமையும். நாட்டின் மிகப்பெரிய எரிபொருள் விற்பனையாளரான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அதிகாரி கூறுகையில்,

“பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் சர்வதேச உற்பத்தி விலையின் அளவும், இந்திய ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டாலரின் விளையும் கணிசமாக உயர்ந்து வருவதையொட்டி இந்த விலை உயர்வு அமைகிறது. சர்வதேச எண்ணெய் சந்தையில் விலைகளின் இயக்கம் கூர்ந்து கவனிக்கப்படும். சந்தையில் வளரும் முறைகள் எதிர்கால விலை மாற்றங்களை பிரதிபலிக்கும்” என்றார்.

கடந்த ஆறு வாரங்களில் பெட்ரோல் விலை நான்கு முறையும், டீசல் விலை ஒரு மாதத்தில் மூன்று முறையும் உயர்த்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க