• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பெட்ரோல், டீசல், விலை உயர்வை கண்டித்து ஒரு தாய் மக்கள் கட்சி சார்பில் ஆர்பாட்டம்

May 16, 2022 தண்டோரா குழு

பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து கோவையில் ஒரு தாய் மக்கள் கட்சி சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

ஒரு தாய் மக்கள் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல்,கேஸ் விலை உயர்வு, விலைவாசி உயர்வை கண்டித்து கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில பொதுச்செயலாளர் ராஜ்கிருஷ்ணா தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்தும் விலைவாசியைக் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கட்சியின் நிறுவன தலைவர் ராஜ் கிருஷ்ணா,

பெட்ரோல் டீசல் விலை வாசி உயர்வால், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருவதாகவும்,எனவே மத்திய மாநில அரசுகள் விலை வாசி உயர்வை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். மேலும் கல்வி, வேலை வாய்ப்புகளில் வறுமையில் இருப்பவர்களுக்கும் திறமையானவர்களுக்கும் சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் மகேஷ் குமார், செயலாளர் பிரபு, மகளிர் அணி செயலாளர் உஷா,மாநில இளைஞரணி செயலாளர் சிவபாலன்,ஐடி பிரிவு அமர்ஜித், புவனேஸ்வர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க