• Download mobile app
01 Apr 2026, WednesdayEdition - 3703
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பெட்ரோல் டீசல் விலை உயர்வு

January 16, 2017 தண்டோரா குழு

பெட்ரோல் விலை லிட்டருக்கு 42 காசும், டீசல் ரூ.1.03 உயர்ந்துள்ளன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்வதன் விளைவாக அரசு நடத்தும் எண்ணெய் நிறுவனங்கள் விலையை உயர்த்தியுள்ளன.இது திங்களன்று அமலுக்கு வந்தது.

பெட்ரோல், டீசல் விலை அந்தந்த மாநிலங்களின் வரிகளுக்கு ஏற்ப அமையும். நாட்டின் மிகப்பெரிய எரிபொருள் விற்பனையாளரான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அதிகாரி கூறுகையில்,

“பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் சர்வதேச உற்பத்தி விலையின் அளவும், இந்திய ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டாலரின் விளையும் கணிசமாக உயர்ந்து வருவதையொட்டி இந்த விலை உயர்வு அமைகிறது. சர்வதேச எண்ணெய் சந்தையில் விலைகளின் இயக்கம் கூர்ந்து கவனிக்கப்படும். சந்தையில் வளரும் முறைகள் எதிர்கால விலை மாற்றங்களை பிரதிபலிக்கும்” என்றார்.

கடந்த ஆறு வாரங்களில் பெட்ரோல் விலை நான்கு முறையும், டீசல் விலை ஒரு மாதத்தில் மூன்று முறையும் உயர்த்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க