• Download mobile app
03 May 2025, SaturdayEdition - 3370
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பெட்ரோல் டீசல் விலையை குறைக்கக்கோரி கோவையில் ஒற்றை காலில் நின்று போராட்டம்

November 29, 2021 தண்டோரா குழு

பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒற்றை காலில் நின்ற இந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தினர்.

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் ஹிந்துஸ்தான் மக்கள் சேவை இயக்கம் சார்பாக பெட்ரோல் டீசல் விலையை குறைக்கக்கோரி தமிழக முதலமைச்சருக்கு மாவட்ட ஆட்சியர் மூலம் மனு அளித்தனர்.

அதில்,தமிழக முதல்வராக பதவியேற்ற பிறகு மக்களுக்கு உண்டான பல்வேறு திட்டங்களை அறிவித்து மிக சிறப்பாக செயல்படுத்தி வருகிறார் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அதற்காக இந்துஸ்தான் மக்கள் சேவை இயக்கம் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

தற்போது வரலாறு காணாத வகையில் பெட்ரோல் டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் நடுத்தர சாமானிய மக்கள் மிகவும் பாதிப்படைந்து விட்டனர். முதல்வர் அவர்கள் பெட்ரோல் டீசல் வரியை குறைக்க நடவடிக்கை எடுத்து சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் இந்த கோரிக்கை மனுவில் கூறியிருந்தனர்.

மேலும் படிக்க