• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பெங்களூர் பாலியல் வன்முறை – வாட்ஸ் அப் தந்த துப்பு

January 6, 2017 தண்டோரா குழு

பெங்களூரில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது, தனியாக வந்த பெண்ணிடம் பாலியல் சீண்டல் செயலில் சம்பந்தப்பட்ட நபர்களை, வாட்ஸ் அப் மூலம் அடையாளம் காட்டினார் பாதிக்கப்பட்ட பெண்.

பெங்களூரில் புத்தாண்டைக் கொண்டாடிவிட்டு, வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த இளம் பெண்ணை, அங்கு வந்த இரண்டு இளைஞர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தினர்.

அந்தக் காட்சி அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. இது சமூக வலை தளங்களில் பரவி, நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையெடுத்து, காவல்துறை தாமாக முன்வந்து நடவடிக்கை எடுத்தது. இச்சம்பவம் கம்மனஹள்ளி என்ற இடத்தில் அதிகாலை 2.30 மணியளவில் நடந்தது.

இது குறித்த தீவிர விசாரணையை அடுத்து, அப்பகுதியைச் சேர்ந்த ஐயப்பா (19), லெனோ (20), சுதேஷ் (20), சோமசேகர் (24) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில், அன்றைய தினம் குடித்துவிட்டு, சாலையில் ‘ஹேப்பி நியூ இயர்’ என்று கத்திக் கொண்டே சென்றுள்ளனர். அப்போது ஓர் இளம் பெண், தனது தோழியுடன் ஆட்டோவில் வருவதைப் பார்த்தனர். அந்தப் பெண்ணைப் பின்தொடர்ந்து வந்துள்ளனர். அவர் ஆட்டோவில் இருந்து இறங்கி வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது அவரிடம் முறைகேடாக நடந்து கொண்டுள்ளனர். இவை அனைத்தும் சிசிடிவி கேமிராவில் பதிவாகியிருந்தது.

எனினும், இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண், காவல் நிலையத்துக்கு வர அஞ்சுகிறார். சம்பவத்தில் ஈடுபட்டவர்களின் புகைப்படங்கள் வாட்ஸ் அப் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. அதில், குற்றவாளி ஐயப்பாவை அப்பெண் வாட்ஸ் அப் மூலம் அடையாளம் காண்பித்துள்ளார்.

“பாதிக்கப்பட்ட பெண்ணுடன் தொடர்ந்து பேசி வருகிறோம். அவரது அடையாளம் வெளியே தெரியாமல் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அவருக்கு உரிய பாதுகாப்பும் அளிப்பதாக உறுதி அளித்திருக்கிறோம்” என்று காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க