• Download mobile app
13 Mar 2026, FridayEdition - 3684
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பெங்களூரில் தமிழ் நூலகம் சூறை. பல்வேறு அமைப்புகள் தர்ணா.

April 25, 2016 தண்டோரா குழு

பெங்களூரில் உள்ள ‘திருக்குறள் மன்ற’ நூலகம் சூறையாடப்பட்டு அங்கிருந்த சுமார் 10 ஆயிரம் தமிழ் புத்தகங்கள் தெருவில் வீசப்பட்டன.

பெங்களூரில் தமிழர்கள் அதிக அளவில் வசிக்கும் அல்சூரில் திருக்குறள் மன்றத்தின் தமிழ் நூலகம் செயல்பட்டு வருகிறது. 1976ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் நூலகத்தில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழந்தமிழ் இலக்கிய நூல்கள் உள்ளன.

தாமோதர் முதலியார் தெருவில் உள்ள அந்த நூலகத்தின் வாயிலில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருந்த பெயர்கள் 10 ஆண்டுகளுக்கு முன்பு விஷமிகளால் தார் பூசி அழிக்கப்பட்டது.

இந்நிலையில் வியாழக்கிழமை மர்ம நபர்கள் நூலகத்தின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தனர். அவர்கள் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மரச் சட்டங்களை உடைத்தனர், மேலும் ஜன்னல்களையும் உடைத்தனர்.

நூலகத்தில் இருந்த 10 ஆயிரம் தமிழ் நூல்களை அவர்கள் தெருவில் வீசினர். இது குறித்து தகவல் அறிந்த திருக்குறள் மன்ற நிறுவனரும், நூலகப் பொறுப்பாளருமான நல்லபெருமாள் பதறியடித்துக் கொண்டு நூலகத்திற்கு வந்தார்.

40 ஆண்டுகளாகச் சேகரித்த நூல்கள் எல்லாம் தெருவில் கிடப்பதைப் பார்த்து அவர் இதுகுறித்து அல்சூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். ஆனால் புகாரை மிகவும் தாமதமாகவே காவல்துறை ஏற்றுக் கொண்டதாகவும், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதையடுத்து, காவல்துறை உயர் அதிகாரிகளைச் சந்தித்து புகார் தெரிவித்தனர். தமிழ் நூலகம் சூறையாடப்பட்டதை கண்டித்து, பல்வேறு தமிழ் அமைப்புகள் இன்று காலை நூலகம் எதிரே தர்ணா நடத்தினர்.

பெங்களூர் கிழக்கு மண்டல காவல்துறை துணை கமிஷனர் சதீஷ் போராட்டக்காரர்களைச் சந்தித்து, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். நூலகத்தைக் காக்க நிதியம் அமைக்க உதவுவதாகவும் சதீஷ் தெரிவித்தார்.

இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. தமிழர்-கன்னடர் நல்லுறவைக் குலைக்கும் வகையில் விஷமிகள் இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளது பெங்களூர் வாழ் தமிழர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க