• Download mobile app
15 Jan 2026, ThursdayEdition - 3627
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

புழல் சிறையில் வேந்தர் மூவீஸ் மதனிடம் ரூ.15ஆயிரம் பறிமுதல்

March 13, 2017 தண்டோரா குழு

சென்னை புழல் சிறையில் உள்ள வேந்தர் மூவீஸ் எஸ்பி மதனிடமிருந்து 15,000 ரூபாயை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

எஸ்.ஆர்.எம். கல்லூரியில் எம்.பி.பி.எஸ். சீட் வாங்கி தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக வேந்தர் மூவிஸ் மதன் மீது புகார் எழுந்தது. அதையடுத்து, பல நாட்களாகத் தலைமறைவாக இருந்த மதனை காவல் துறையினர் கடந்த நவம்பர் மாதம் திருப்பூரில் கைது செய்து, சென்னை புழல் சிறையில் அடைந்தனர்.

இந்நிலையில், புழல் சிறையில் உள்ள கைதிகளிடம் அதிக அளவு பணம் புழங்குவதாகச் சிறையின் ஊழல் கண்காணிப்பு அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. அதையடுத்து சிறையில் உள்ள அறைகளைக் காவலர்கள் சோதனை நடத்தினர்.

அப்போது மதன் அறையில் ரூ. 15 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க