• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

புனே பேக்கரி தீ விபத்து 6 தொழிலாளர்கள் பலி

December 31, 2016 தண்டோரா குழு

மகாராஷ்டிர மாநிலம் புனே நகர் பேக்கரி ஒன்றில் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 30) அதிகாலை திடீரென்று தீ பிடித்ததில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

இது குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
புனே நகரில் பலமாடி கட்டடத்தின் கீழ்பகுதியில் ‘பெகேஸ் அண்ட் கேகேஸ்’ என்னும் பிரபல பேக்கரி உள்ளது. வெள்ளிக்கிழமை அதிகாலையில் அங்கே திடீரென்று தீ பிடித்துள்ளது.

பேக்கரி உள்ளே தூங்கிக்கொண்டிருந்த 6 தொழிலாளர்கள் பேக்கரிக்கு வெளியே பூட்டப்பட்டிருந்ததால் தப்பிக்க முடியவில்லை. தீயின் புகையால் மூச்சுத்திணறி பரிதாமாக உயிரிழந்தனர். குறைந்த மின்சாரக் கோளாறு காரணமாகத்தால் இந்த விபத்து நேர்ந்தது என்று சந்தேகிக்கிறோம். மேலும் 6 பேர் உள்ளிருக்கும் போது எப்படி வெளியே பூடப்பட்டிருந்தது என்று விசாரணை செய்து வருகிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க