• Download mobile app
05 Nov 2025, WednesdayEdition - 3556
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

புதுச்சேரியில் சுத்தமான கிராமம் என்ற சான்றிதழ் பெற்றால்தான் இலவச அரிசி வழங்கப்படும் – கிரண்பேடி

April 28, 2018 தண்டோரா குழு

புதுச்சேரியில் சுத்தமான கிராமம் என்ற சான்றிதழ் பெற்றால்தான் இலவச அரிசி வழங்கப்படும் என்று புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

கிராமங்களில் தூய்மைப்பணியை வலியுறுத்தும் வகையில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிக்கும் மக்களுக்கு வழங்கப்படும் இலவச அரிசி திட்டத்தில் தற்போது புதியமுறையை ஆளுநர் கிரண் பேடி கொண்டு வந்துள்ளார்.அதன்படி சுத்தமான கிராமம் என சான்றிதழ் பெற்றால் மட்டுமே இலவச அரிசி வழங்கப்படும் என்றும்,சுத்தமான கிராமம் என்ற சான்றிதழ் பெறாத கிராமங்களில் இலவச அரிசிவழங்கப்படாது என்று தெரிவித்துள்ளார்.

மேலும்,சுத்தமான கிராம சான்றிதழ் பெறும்வரை அரிசி சேமிக்கப்பட்டு மொத்தமாக வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க