July 7, 2018
தண்டோரா குழு
சமுதாய நலன் கருதி புகைபிடிக்கும் காட்சிகளில் நடிகர்கள் நடிக்க வேண்டாம் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்,
“சமுதாய நலன் கருதி புகைபிடிக்கும் காட்சிகளில் நடிகர்கள் நடிக்க வேண்டாம். திரைப் படத்துறையினர் லாப நோக்கம் கருதாமல் சமுதாயத்துக்காக செயல்பட வேண்டும்.நடிகர்கள் எம்ஜிஆர் போன்று நல்ல கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும்.மத்திய அரசு சட்டம் இயற்றினால்தான் சிகரெட்டுக்கு தடைவிதிக்க முடியும் என கூறினார்
சட்டமன்ற தேர்தலுடன்,நாடாளுமன்ற தேர்தலை நடத்தக்கூடாது.2024ல் சட்டப்பேரவைக்கும், நாடாளுமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் ஏற்று கொள்வோம்.இவ்விவகாரத்தில் ஜெயலலிதாவின் கொள்கையையே கடைபிடிக்கிறோம்.தேர்தல் ஆணையத்தின் முடிவை அறிந்த பின்பே கருத்து தெரிவிக்க முடியும்”. எனக் கூறினார்.