• Download mobile app
04 Apr 2026, SaturdayEdition - 3706
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பீக் ஹவர்ஸ் கட்டணத்தை குறைத்து பயனில்லை, அந்த கட்டணத்தையே நீக்க வேண்டும் – சிறு குறு தொழிற்சங்கம்

November 21, 2022 தண்டோரா குழு

குறு சிறு தொழில்கள் முனைவோர்கள் பயன்படுத்தும் LT.CT (112 kw) -க்கான பீக் அவர் கட்டண உயர்வை தமிழக அரசு முழுமையாக திரும்ப பெற வேண்டும்,முன்பு இருந்த நிலைக்கட்டணம் ரூபாய் 35 மட்டும் தொடர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் உண்ணாவிரதம் மற்றும் ஒரு நாள் கதவடைப்பு போராட்டம் நடத்த உள்ளதாக கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

கோவையில் பல்வேறு தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பான போசியா சார்பாக கூட்டமைப்பின் நிர்வாகிகள் சார்பாக செய்தியாளர்கள் சந்திப்பு ரேஸ்கோர்ஸ் பகுதியில் சீமா அரங்கில் நடைபெற்றது. இதில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் ஜேம்ஸ்,சிவ சண்முக குமார், சுருளிவேல் மற்றும் கூட்டமைப்பினர் பேசினர்.

அப்போது இந்தியாவின் முதுகெலும்பாக உள்ள சிறு குறு தொழில் செய்வோர் ஏற்கனவே கடந்த இரண்டரை வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக கடுமையாக பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் அண்மையில் தமிழக அரசு அறிவித்த,மின் கட்டண உயர்வு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் எனவும்,குறிப்பாக சிறு குறு தொழில்கள் முடங்கும் அளவிற்கு பீக் அவர் கட்டணம் நிர்ணயம் தமிழகத்தின் அடையாளமாக உள்ள சிறு குறு தொழில் முழுவதும் முடங்கும் அபாயம் ஏற்ப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

எனவே, குறு சிறு தொழில்கள் முனைவோர்கள் பயன்படுத்தும் LT.CT (112 kw) -க்கான பீக் அவர் கட்டண உயர்வை தமிழக அரசு முழுமையாக திரும்ப பெற வேண்டும் 2. LT.CT -யின் மின்சாரத்தை பயன்படுத்தும் குறு சிறு தொழில்களை பாதுகாக்க 112 kw வரை முன்பு இருந்த நிலைக்கட்டணம் ரூபாய் 35 மட்டும் தொடர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற ,இரண்டு வகையான பீக் அவர் கட்டணத்தை முழுமையாக திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி,போசியா கூட்டமைப்பின் 18 தொழில் அமைப்புக்கள் இணைந்து,கோவையில் ஒரு நாள் உண்ணாவிரதம் போராட்டம் நடத்த உள்ளதாகவும்,அதே நாளில் தொழில் கூடங்கள் ஒரு நாள் கதவடைப்பு நடத்த உள்ளதாகவும் தெரிவித்தனர்.

மேலும் படிக்க