• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பீகாரில் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கோவை விமானப்படை ஊழியர் கைது

July 24, 2018 தண்டோரா குழு

பீகாரில் 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கோவை சூலூர் விமானப்படையில் பணிபுரியும் ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பீஹார் மாநிலம் அவுரங்கபாத் பகுதியை சேர்ந்தவர் பப்புகுமார். கோவை சூலூர் விமானப்படையில் தொழில்நுட்ப உதவியாளராக பணியாற்றி வருகிறார்.இவர் அவுரங்கபாத் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை காதலிப்பதாகவும்,திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, பப்புகுமாரை கைது செய்ய பிடிவாரண்டுடன் பாட்னா அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பார்வதி குமாரி தலைமையில் 3 பேர் கொண்ட குழு கோவை வந்தனர்.

சூலூர் காவல் நிலைய போலீசார் உதவியுடன் பப்புகுமாரை கைது செய்த பாட்னா போலீசார் கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் பப்புகுமாரை ஆஜர்ப்படுத்தினர்.இதனையடுத்து பப்புகுமாரை பீகார் அழைத்துச் செல்ல நீதிபதி நாகராஜன் அனுமதியளித்தார். இதனைத்தொடர்ந்து போலீசார் அவரை ரயில் மூலம் பீகார் அழைத்துசென்றனர்.வரும் 27ம் தேதி பீகாரில் நீதிமன்றத்தில் பப்புகுமாரை ஆஜர்படுத்த உள்ளனர்.

மேலும் படிக்க