June 3, 2025
தண்டோரா குழு
சாந்தி ஆசிரமம், எம் ஐ.டி மருத்துவக் குழு இணைந்து ரூ.30 லட்சம் மதிப்பிலான பிறவிலேயே காது கேட்காதவர்களுக்கு காது கேட்கும் திறன் இல்லை என்பதை கண்டறியும் பரிசோதனை கருவியினை பி.எஸ். ஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் சாந்தி ஆசிரமம் தலைவர் டாக்டர் கே. கேசிவினோ அரம், ஜெர்மனியை சேர்ந்த எம்.ஐ.டி மருத்துவக் குழு டாக்டர்கள் பாரூன் சர்க்கார், ரோலன், பி.எஸ்.ஜி மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ஜே.எஸ் புவனேஸ்வரன், பி. எஸ்.ஜி மருத்துவமனை இஎன்டி தலைமை ஆலோசகர் டாக்டர் தயானந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது அவர்கள் கூறுகையில்,
சர்வதேச பொது சுகாதார மையம், ஜெர்மனியை சேர்ந்த எம்.ஐ.டி மருத்துவ குழு, சாந்தி ஆசிரமம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியினால், பிறவியிலேயே காது கேட்காதவர்களை பரிசோதனைகள் மூலம் கண்டறிந்து அவர்களுக்கு இலவசமாக காது கேட்கும் கருவியினை வடிவமைத்து கடந்த 4 ஆண்டுகளாக வழங்கி வருகிறோம்.
இதுவரை 41,424 குழந்தைகளுக்கு காது கேட்கும் திறன் குறித்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 63 குழந்தைகளுக்கு ரூபாய் ஒரு கோடி மதிப்பிலான இரட்டை காது கேட்பு கருவிகள் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு காது கேட்பு கருவியும் ரூ.2.5 லட்சம் மதிப்புடையது. பி.எஸ்.ஜி மருத்துவமனைக்கும் ரூ.30 லட்சம் மதிப்பிலான பிறவியிலேயே காது கேட்கும் திறன் அற்றவர்களை கண்டறியும் பரிசோதனை கருவி வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் தொடர்ந்து பரிசோதனைகள் மூலம் காது கேட்கும் திறன் அற்றவர்களை கண்டறிந்து அவர்களுக்கு காது கேட்பு கருவிகள் வழங்கப்பட உள்ளது என்றனர்.