• Download mobile app
05 Jun 2025, ThursdayEdition - 3403
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பி.எஸ். ஜி மருத்துவ மருத்துவமனைக்கு பிறவிலேயே காது கேட்காதவர்களுக்கு காது கேட்கும் திறன் இல்லை என்பதை கண்டறியும் பரிசோதனை கருவி வழங்கல்

June 3, 2025 தண்டோரா குழு

சாந்தி ஆசிரமம், எம் ஐ.டி மருத்துவக் குழு இணைந்து ரூ.30 லட்சம் மதிப்பிலான பிறவிலேயே காது கேட்காதவர்களுக்கு காது கேட்கும் திறன் இல்லை என்பதை கண்டறியும் பரிசோதனை கருவியினை பி.எஸ். ஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் சாந்தி ஆசிரமம் தலைவர் டாக்டர் கே. கேசிவினோ அரம், ஜெர்மனியை சேர்ந்த எம்.ஐ.டி மருத்துவக் குழு டாக்டர்கள் பாரூன் சர்க்கார், ரோலன், பி.எஸ்.ஜி மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ஜே.எஸ் புவனேஸ்வரன், பி. எஸ்.ஜி மருத்துவமனை இஎன்டி தலைமை ஆலோசகர் டாக்டர் தயானந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது அவர்கள் கூறுகையில்,

சர்வதேச பொது சுகாதார மையம், ஜெர்மனியை சேர்ந்த எம்.ஐ.டி மருத்துவ குழு, சாந்தி ஆசிரமம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியினால், பிறவியிலேயே காது கேட்காதவர்களை பரிசோதனைகள் மூலம் கண்டறிந்து அவர்களுக்கு இலவசமாக காது கேட்கும் கருவியினை வடிவமைத்து கடந்த 4 ஆண்டுகளாக வழங்கி வருகிறோம்.

இதுவரை 41,424 குழந்தைகளுக்கு காது கேட்கும் திறன் குறித்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 63 குழந்தைகளுக்கு ரூபாய் ஒரு கோடி மதிப்பிலான இரட்டை காது கேட்பு கருவிகள் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு காது கேட்பு கருவியும் ரூ.2.5 லட்சம் மதிப்புடையது. பி.எஸ்.ஜி மருத்துவமனைக்கும் ரூ.30 லட்சம் மதிப்பிலான பிறவியிலேயே காது கேட்கும் திறன் அற்றவர்களை கண்டறியும் பரிசோதனை கருவி வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் தொடர்ந்து பரிசோதனைகள் மூலம் காது கேட்கும் திறன் அற்றவர்களை கண்டறிந்து அவர்களுக்கு காது கேட்பு கருவிகள் வழங்கப்பட உள்ளது என்றனர்.

மேலும் படிக்க