• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பி.எஸ்.ஜி மருத்துவமனையில் இருதய ஆராய்ச்சி குறித்த சர்வதேச கருத்தரங்கு

April 30, 2022 தண்டோரா குழு

கோவை பீளமேட்டில் உள்ள பி.எஸ்.ஜி மருத்துவமனையில் ரிக்ஸ் 2022 எனும் தலைப்பில் சர்வதேச கருத்தரங்கம் பி.எஸ்.ஜி மருத்துவமனை வளாகத்தில் இன்று காலை நடைபெற்றது.

கருத்தரங்கிற்கு வந்திருந்த அனைவரையும் பி.எஸ்.ஜி மருத்துவமனை முதல்வர் சுபாராவ் வரவேற்றார். பி.எஸ்.ஜி மருத்துவமனை இயக்குனர் ஜே.எஸ்.புவனேஸ்வரன், ஜி.கே.என்.எம் மருத்துவமனை முன்னாள் இருதய நலத்துறை தலைவர் முரளிதரன், பி.எஸ். ஜி ஆராய்ச்சி மைய இயக்குநர் சுதா ராமலிங்கம், இருதய அறுவை சிகிச்சை நிபுணர் வரதராஜன் ஆகியோர் பேசினர்.

தொடர்ந்து பி.எஸ். ஜி தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட ஐ ஆப்டிமா எனும் இருதய அறுவை சிகிச்சைக்கு பயன்படும் கருவியினை,பி. எஸ்.ஜி அறக்கட்டளை தலைவர் ஜி.ஆர் கார்த்திகேயன் அறிமுகப்படுத்தி வைத்தார். கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை பி.எஸ்.ஜி மருத்துவமனையின்
தலைமை இருதய அறுவை நிபுணரும், துறைத் தலைவருமான பி. ஆர் முருகேசன் மற்றும் அவரது மருத்துவ குழுவினர் செய்திருந்தனர்.

கருத்தரங்கில் இருதய அறுவை சிகிச்சை, ரத்தநாள அறுவை சிகிச்சையில் உள்ள அண்மைகால முன்னேற்றங்கள் குறித்தும் கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது.இயந்திரம் மூலம் செய்யப்படும் அறுவை சிகிச்சை முறை மற்றும் பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் மூலம் அறுவை சிகிச்சை செய்யும் முறைகள் குறித்தும் கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது.

தொடர்ந்து கருத்தரங்கில் தொழில்நுட்பம் மற்றும் மருத்துவம் சார்ந்த பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

மேலும் படிக்க