• Download mobile app
21 May 2025, WednesdayEdition - 3388
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

பி.எஸ்.ஜி மருத்துவமனையின் பவள விழா கொண்டாட்டம் – 35 பேருக்கு விருது வழங்கி கௌரவிப்பு

November 15, 2024 தண்டோரா குழு

பி.எஸ்.ஜி மருத்துவமனையின் 35 வது மருத்துவமனை தினம் இன்று மருத்துவமனை வளாகத்தில் இன்று நடைபெற்றது.

பிஎஸ்ஜி மருத்துவமனை கடந்த 1989ஆம் ஆண்டு நவம்பர் 15 மாதம் துவங்கப்பட்டது. இதையடுத்து, ஒவ்வொரு ஆண்டும் பி.எஸ்.ஜி
மருத்துவமனை துவங்கப்பட்ட நாளை மருத்துவமனை சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த ஆண்டு நவம்பர் 15ம் தேதியான இன்று பி. எஸ்.ஜி மருத்துவமனையின் 35வது
ஆண்டு பவள விழா மருத்துவமனை வளாகத்தில் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், பி.எஸ்.ஜி & சன்ஸ் அறக்கட்டளையின் தலைவர் ஜி. ஆர். கார்த்திகேயன், அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் எல்.கோபாலகிருஷ்ணன், மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் புவனேஸ்வரன், புற்றுநோயில் சிகிச்சை மையத்தின் இயக்குநர் டாகடர் பாலாஜி, மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் சுப்பாராவ், முன்னாள் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் ராதாகிருஷ்ணன் உட்பட பல்வேறு துறை சார்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள், மாணவர்கள் என பி.எஸ்.ஜி. குழும நிறுவன பணியாளர்கள் பங்கேற்றனர்.

மேலும், விழாவில் பி எஸ் ஜி மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், மனிதவள மேம்பாடு துறை, மருந்தகம், ஆய்வகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக பணியாற்றிய பணியாளர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மேலும் படிக்க