கோவை பீளமேட்டில் உள்ள பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா இன்று மாலை கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது.
பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) சித்ரா வரவேற்றுப் பேசினார். நிகழ்ச்சிக்கு பி.எஸ்.ஜி அன்ட் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாகக் குழு மற்றும் நிர்வாக அறங்காவலர் எல். கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார்.
மைக்ரோசாஃப்ட் ரிசர்ச் இந்தியாவின் நிறுவன துணைத் தலைவரும்,நிர்வாக இயக்குனருமான டாக்டர் ஸ்ரீராம் ராஜாமணி, 2024 ம் ஆண்டு அறிவியல் பாடங்களை படித்த 309 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
இதில் 5 ஆண்டு ஒருங்கிணைந்த எம். எஸ் சி மென்பொருள் அமைப்புகள், கோட்பாட்டு கணினி அறிவியல், தரவு அறிவியல், சைபர் பாதுகாப்பு, ஃபேஷன் வடிவமைப்பு மற்றும் வணிகம் பட்டப்படிப்பும் , 2 ஆண்டு எம்.எஸ்.சி அப்ளைடு கணிதம், மாஸ்டர் ஆஃப் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் மற்றும் பி.எஸ் சி கம்ப்யூட்டர் சிஸ்டம்ஸ் மற்றும் வடிவமைப்பு, பயன்பாட்டு அறிவியல் பட்டப்படிப்பு முடித்த மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்தார்.
நிகழ்ச்சியில் கல்லூரி ஆலோசகர் பிரகாசம், பேராசிரியர்கள்,மாணவ, மாணவிகள் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்