• Download mobile app
02 Apr 2026, ThursdayEdition - 3704
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

September 26, 2022 தண்டோரா குழு

கோவை பீளமேடு பகுதியில் அமைந்துள்ள பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

விழாவில் கல்லூரி முதல்வர் பிரகாசன் அனைவரையும் வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினராக பாலக்காடு ஐ.ஐ.டி இயக்குனர் சுனில்குமார் கலந்து கொண்டு பட்டங்களை வழங்கி சிறப்பித்தார்.

பின்னர் அவர் பேசிகையில்,

பட்டம் பெற்ற உடன் உங்கள் கற்றல் நின்று விடவில்லை என்றும், அது வாழ்க்கை முழுவதும் தொடரும். தற்போது நீங்கள் கற்பதற்கான அனைத்து வடிவிலான புத்தக தொகுப்புகளும் எல்லா வடிவிலும் உங்களுக்கு கிடைக்கின்றன. ஆனால் முன்பு அப்படி இல்லை, எளிதாக தரவுகள் கிடைத்து விடாது.இப்பொழுது எல்லா வகையான தரவுகளும் உங்களுக்கு எளிதில் கிடைத்து விடுகின்றன.அதனால் நீங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள் என்று தனது கருத்தினை தெரிவித்தார்.

ஒரு விசயத்தை உறுதியாக நம்பினால் அதை செய்யுங்கள்.ஆனால் அதில் ஏதேனும் தயக்கம் இருந்தால் அதை செய்ய முயலாதீர்கள் . நீங்கள் விரும்பிய செயலை செய்யுங்கள்.செய்யும் வேலையையும் பிடித்து செய்யுங்கள். கடின உழைப்பை கைவிடாதீர்கள் என எடுத்துரைத்தார்.

இந்த பட்டமளிப்பு விழாவில் இளங்கலை , முதுகலையைச் சேர்ந்த மாணவர்கள் சுமார் 348 பேர் பட்டங்களை பெற்றனர் .

மேலும் படிக்க