• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிளாஸ்டிக் பாட்டிலை குப்பையில் போட்டால் 5 ரூபாய் பரிசு

June 8, 2018 தண்டோரா குழு

தண்ணீர் பாட்டில்களைக் குடித்துவிட்டு சரியான இடத்தில் போட்டால் 5 ரூபாய் பரிசளிக்கும் திட்டத்தை ரயில்வே துறை அமல்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள ரயில் நிலையத்தில் ரயில்வே நிர்வாகம் பிளாஸ்டிக் பாட்டில் சேகரிப்பு இயந்திரம் ஒன்றை வைத்துள்ளது.இதில் குடித்துவிட்டு காலி தண்ணீர் குளிர்பானம் பாட்டில்கள் போன்றவற்றை போட்டால் ஒவ்வொரு பாட்டிலுக்கும் 5 ரூபாய் பரிசு கிடைக்கும்.

பேடிஎம் மொபைல் வாலெட் அப்ளிகேஷன் மூலம் இந்த பரிசு பெற்றுக்கொள்ள முடியும்.
எனவே ஒரு பாட்டிலை இந்த இயந்திரத்தில்போட்ட பின் அந்த இயந்திரத்தில் பேடிஎம் மொபைல் எண்ணை அளிக்க வேண்டும்.

அந்த எண்ணுக்கு 5 ரூபாய் கேஷ்பேக் தொகையாக கிடைத்துவிடும்.இந்த திட்டத்துக்கு ரயில் பயணிகளிடையே நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.பிளாஸ்டிக் குப்பைகளைக் குறைக்கும் நோக்கில் இந்தத் திட்டத்தை ரயில்வே நிர்வாகம் செயல்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க