• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிரியாணி கடை தாக்குதல்: நேரில் ஆறுதல் கூறிய மு.க. ஸ்டாலின்

August 2, 2018

திமுகவினரால் தாக்கப்பட்ட பிரியாணி கடை உரிமையாளர் மற்றும் ஊழியரை மு.க. ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள பிரியாணி கடை ஒன்றில் திமுக மாணவர் அணி நிர்வாகி யுவராஜ்,திவாகர் ஆகியோர் கடந்த 28ம் தேதி இலவசமாக பிரியாணி கேட்டு அக்கடையின் பணியாளர்களை தாக்கியுள்ளனர்.இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இதனைத்தொடர்ந்து,இந்த தாக்குதலுக்கு காரணமான திமுகவை சேர்ந்த நிர்வாகி யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பிரியாணி கடையின் உரிமையாளர் விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து யுவராஜ்,திவாகர் ஆகியோர் கழகக் கட்டுப்பாட்டை மீறியும்,கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுவதாக தலைமை கழகம் நேற்று அறிவித்தது.
இந்நிலையில் தாக்குதலுக்கு ஆளான பிரியாணி கடை உரிமையாளர் மற்றும் ஊழியரை மு.க. ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.அவருடன், ஆ.ராசா, மா.சுப்பிரமணியம் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.

மேலும் படிக்க