August 2, 2018
திமுகவினரால் தாக்கப்பட்ட பிரியாணி கடை உரிமையாளர் மற்றும் ஊழியரை மு.க. ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள பிரியாணி கடை ஒன்றில் திமுக மாணவர் அணி நிர்வாகி யுவராஜ்,திவாகர் ஆகியோர் கடந்த 28ம் தேதி இலவசமாக பிரியாணி கேட்டு அக்கடையின் பணியாளர்களை தாக்கியுள்ளனர்.இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இதனைத்தொடர்ந்து,இந்த தாக்குதலுக்கு காரணமான திமுகவை சேர்ந்த நிர்வாகி யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பிரியாணி கடையின் உரிமையாளர் விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து யுவராஜ்,திவாகர் ஆகியோர் கழகக் கட்டுப்பாட்டை மீறியும்,கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுவதாக தலைமை கழகம் நேற்று அறிவித்தது.
இந்நிலையில் தாக்குதலுக்கு ஆளான பிரியாணி கடை உரிமையாளர் மற்றும் ஊழியரை மு.க. ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.அவருடன், ஆ.ராசா, மா.சுப்பிரமணியம் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.