• Download mobile app
11 May 2025, SundayEdition - 3378
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பிரதமர் மோடி நீலகிரி வருகை 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு

April 8, 2023 தண்டோரா குழு

இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரும் 9ம் தேதி நீலகிரிக்கு வரவுள்ளார். முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமை அவர் பார்வையிடவுள்ளார்.பிரதமர் வருகையை முன்னிட்டு முதுமலை பகுதி போலீஸ் கட்டுபாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கே வணிக, வர்த்தக கடைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் வந்து செல்லும் வரை கட்டுபாடுகள் நடைமுறையில் இருக்கும்.பிரதமர் வருகையை முன்னிட்டு மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி., சுதாகர், டிஐஜி விஜயகுமார் தலைமையில் 7 எஸ்.பிக்கள் கொண்ட பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி நடக்கிறது. பிரதமர் பங்கேற்கும் பகுதியில் மட்டும் சுமார் 2 ஆயிரம் போலீசார் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அந்த பகுதியில் டிரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

செக்போஸ்ட், அடர்ந்த வனப்பகுதி, டிரக்கிங் செல்லும் பகுதியில் போலீசார் கண்காணிப்பு பணி நடத்தி வருகின்றனர்.பிரதமர் ஹெலிகாப்டர் மூலமாக மைசூரில் இருந்து முதுமலை வரவுள்ளதாக தெரிகிறது. இந்த பகுதியில் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளவும், பாதுகாப்பு ஒத்திகை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களில் இருந்து போலீசார் நீலகிரி மாவட்டத்திற்கு பாதுகாப்பு பணிக்காக செல்லவுள்ளனர். பிரதமர் வருகையை முன்னிட்டு முதுமலைப்பகுதியில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்படவுள்ளது.

மேலும் படிக்க