• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிரதமர் மோடி இன்று இரவு மீண்டும் நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார்

March 24, 2020 தண்டோரா குழு

கொரோனா அச்சுறுத்தல் குறித்து இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி, மீண்டும் நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருக்கிறது.கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் முடக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில் கடந்த வாரம் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என கேட்டு கொண்டு 22ல் மக்கள் ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என கேட்டு கொண்டார். யாரும் தேவையில்லாமல் வெளியிடங்களுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியிருந்தார்.

இந்நிலையில், நாடு முழுவதும் கொரோனாவை தடுக்க கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு மீண்டும் நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளார். கொரோனா அச்சுறுத்தல் தொடர்பாக பேச உள்ளார்.

இது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவு:கொரோனா அச்சுறுத்தல் தொடர்பாக இன்று, இரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளேன் என பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க