• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பிரதமர், முதல்வரை விமர்சித்து பாடிய கோவன் கைது!

April 13, 2018

பிரதமர்,முதல்வரை விமர்சித்து பாடிய பிரச்சாரப் பாடகர் கோவன் எதிராக தொடர்ந்த வழக்கில் அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மக்கள் கலை இலக்கிய கழகத்தை சேர்ந்த நாட்டுப்புறக் கலைஞர்,பாடகர்,சமூகச் செயற்பாட்டாளர் கோவன்.நாட்டுப் பாடல்கள் பாடுவதில் அதிக ஆர்வம் கொண்ட கோவன் அரசின் அடக்குமுறைகளை கண்டித்து வீதிகளில் இறங்கி மக்கள் மத்தியில் பாடல் வடிவில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருபவர்.

மக்கள் கலை இலக்கியக் கழகத்துடன் இணைந்து இதனை கோவன் செய்து வருகிறார். இதற்கிடையில்,காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி மக்கள் அதிகாரம் சார்பாக கடந்த சில நாட்களுக்கு முன் திருச்சியில் தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது.

அப்போது கோவன் வன்முறையை தூண்டும் விதமாக பாடியதாகவும்,பிரதமர்,முதல்வரை விமர்சிக்கும் விதமாக பாடல் பாடியதாகவும் அவர் மீது 2 பிரிவுகளின் கீழ் கோவன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில்,பாடகர் கோவனனை கைது செய்ய மாற்று உடையில் டூரிஸ்ட் வாகனத்தில் சென்ற போலீசாரிடம் பொதுமக்கள் கைது செய்யக் கூடாது என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.பின்னர் அப்பகுதிக்கு சென்ற போலீசார் கோவனை தடியால் அடித்து இழுத்து சிறிது நேரத்தில் செல்ல கூடிய கே.கே.நகர் காவல் நிலையத்திற்கு சுற்றி சென்றுள்ளனர்.மேலும்,கோவன் குழந்தைகள் மற்றும் மனைவியையும் போலீசார் காயப்படுத்தியுள்ளனர்.

முழு மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி ஜெயலலிதா முதல்வராக இருந்த போது மூடு டாஸ்மாக்கை மூடு என்று பாடியதற்காக கடந்த 2015ம் ஆண்டு கோவன் தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க