• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பின்னணிப் பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியத்தின் பாஸ்போர்ட் திருட்டு

April 5, 2017 தண்டோரா குழு

பிரபல பின்னணிப் பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக அமெரிக்கா சென்றுள்ளார்.அங்கு அவரது பாஸ்போர்ட், கிரடிட் கார்டுகள், ரொக்கப் பணம், ஐபேட் ஆகியவை திருடப்பட்டதாக தகவல்கள் வெளியானது.

இது தொடர்பாக முகநூலில் அவர் கூறியிருப்பதாவது,

தனது பையில் வைத்திருந்த பாஸ்போர்ட் மட்டுமின்றி கிரடிட் கார்டுகள்,பணம்,ஐபேட் பாடல் இசை குறிப்பு ஆகியவை திருடு போனதாகவும் இதுக்குறித்து அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் உள்ள இந்திய தூதரகத்தில் புகார் தெரிவித்தாகவும் கூறியுள்ளார்.

இதனையடுத்து, 24 மணி நேரத்தில் எஸ்பி பாலசுப்ரமணியத்துக்கு பாஸ்போர்ட் நகல் வழங்கப்பட்டது. இதற்காக இந்திய துதரகத்துக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.மேலும் திருடு போன பொருட்களை தேடும் பணி நீடிக்கிறது.

மேலும் படிக்க