• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியின் பேராசிரியைக்கு மொபைல் பக்” காப்புரிமை வழங்கல்

March 22, 2022 தண்டோரா குழு

கோயம்புத்தூர் பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியின் இயற்பியல் துறைப்பேராசிரியை டாக்டர் என். பிரியதர்சினிக்கு “மொபைல் பக்” என்ற பெயரில் காப்புரிமை வழங்கப்பட்டது.

நெட்வொர்க் ஆண்டெனாக்கள் மூலம் தீவிரமாகத் தொடர்பு கொள்ளும் மொபைல் போன்களைக் கண்டறிவதற்காகத் தகவல் தொடர்புத் துறையில் இந்த காப்புரிமை உள்ளது. இந்த கண்டுபிடிப்பின் வழியாக செயலில் உள்ள மொபைல் சிக்னல்களைக் கண்டறிவதற்கான ஒரு தனித்தன்மை உள்ளது.கடந்த பத்தாண்டுகள் வரை, செயலற்ற நிலையில் உள்ள செல்போன் சிக்னல்களைக் கண்டறிய அனைத்து மொபைல் டிடெக்டர்களும் பயன்படுத்தப்பட்டன.

இந்த கண்டுபிடிப்பு, தடைசெய்யப்பட்ட பகுதியில் செயலில் உள்ள மொபைல் போன்களை துல்லியமாகவும் நம்பத்தக்க வகையிலும் செலவு குறைந்த முறையில் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில் கண்டறியப் படுவதாகும். இந்த தொழில்நுட்ப கண்டுபிடிப்பின் பின்னணியில் மைக்ரோ கண்ட்ரோலர் மூலம் அனலாக் முதல் டிஜிட்டல் டிரான்ஸ்மிஷனைப் பயன்படுத்தி செல்போனிலுள்ள சிக்னல்களைத் தெளிவாக உணர முடியும்.

இக்கண்டுபிடிப்பின் காப்புரிமை ஜூலை 18 2012 முதல் முன்னுரிமை வழங்கப்பட்டு 20 ஆண்டுகள் செயல்படுத்தப்படும். சமுதாய நோக்கில் இப்புதுமையான கருவியைக் கண்டுபிடித்த டாக்டர் என் பிரியதர்ஷினியின் அரும் முயற்சிக்கு கல்லூரி நிர்வாகம், தலைவர், செயலர், முதல்வர் ஆகியோர் பாராட்டி வாழ்த்தினைத் தெரிவித்தனர்.

மேலும் படிக்க