• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பா.ஜ.க.வுடன் கூட்டணியோ ஆதரவோ இல்லை முதல்வர் எடப்பாடி அதிரடி

March 21, 2018 தண்டோரா குழு

பா.ஜ.க.வுடன் கூட்டணியோ ஆதரவோ இல்லை என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடியாக அறிவித்துள்ளார்.

சட்டசபையில் காவிரி மேலாண்மை வாரியம்  அமைப்பது  தொடர்பாக  தி.மு.க எம் எல்.ஏ  கு.பிச்சாண்டி  கேள்வி எழுப்பினார். அப்போது அவருக்கு பதில் அளித்து பேசிய  முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி,காவிரியில் நீர் பெற தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.பாரதிய ஜனதாவுடன் கூட்டணியுமில்லை, ஆதரவும் இல்லை என கூறினார்.

அப்போது காவிரி விவகாரத்தில் உங்களால் எதுவும் செய்யமுடியவில்லை என்றால் என்னிடம் சொல்லுங்கள் என ஸ்டாலின் கூறினார்.இதற்கு பாஜகவுடன் கூட்டணியில் இருந்த போது திமுக காவிரி விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுத்தது? ஆந்திர பிரச்சினைக்காக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருகிறார்கள்.

காவிரிக்காக மற்ற மாநிலங்கள் குரல் கொடுக்கவில்லை. நமக்காக எந்த மாநிலமும் நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கவில்லை.காவிரிக்காக நமது எம்பிக்கள் நாடாளுமன்றத்தை முடக்கி வருகின்றனர்  என முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி கூறினார்.

மேலும் படிக்க