• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பாஸ்போர்ட் அலுவலக வளாகத்தில் மாதிரி வாக்குப்பதிவு

November 12, 2021 தண்டோரா குழு

கோவை உப்பிலிபாளையத்தில் உள்ள பாஸ்போர்ட் அலுவலக வளாகத்தில் நகர்புற ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மாதிரி வாக்குப்பதிவு நடந்தது.

கோவை மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் நகர்புற ஊரக உள்ளாட்சி தேர்தல் பணிகளுக்கு பயன்படுத்தப்படவுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று நடைபெற்றது. இந்த தேர்தலுக்கு மொத்தம் 6618 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவைப்படுகின்றன.

இதில் தற்போது வரை 3332 இயந்திரங்கள் வந்துள்ளது.இதில் 5 சதவீதம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாதிரி வாக்குப்பதிவுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.இந்நிகழ்வில் பெல் நிறுவன பொறியாளர்கள் 10 நபர்கள் பங்கேற்று வாக்குப்பதிவு இயந்திரத்தினை பரிசோதனை செய்தனர். இந்த மாதிரி வாக்குப்பதிவினை மாநகராட்சி துணை கமிஷனர் ஷர்மிளா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிகழ்வில் உதவி கமிஷனர் (வருவாய்) செந்தில்குமார் ரத்தினம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (ஊரக உள்ளாட்சி தேர்தல்) சந்தானம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

மேலும் படிக்க