உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாலிவுட் நடிகர் இர்பான் கான்(54), சிகிச்சை பலன்இன்றி காலமானார்.
பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர் இர்பான் கான்.தேசிய விருது பெற்ற இவர் ஏராளமான பாலிவுட் படங்களிலும் பிரிட்டிஷ் மற்றும் ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் இர்ஃபான் கானின் தாயார் சயீதா பேகம் ஜெய்ப்பூரில் காலமானார்.ஆனாால் தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால் அவரால் அங்கு செல்ல முடியவில்லை. இதனால் வீடியோ கால் மூலம் தனது அம்மாவுக்கான மரியாதையை நடிகர் இர்ஃபான் கான்
செலுத்தினார்.
இதற்கிடையில்,கடந்த 2018ம் ஆண்டு கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு லண்டனில் சிகிச்சை பெற்று குணமடைந்து மீண்டும் நடிக்க வந்தார். இந்நிலையில் இர்பான் கானுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு நேற்று இரவு மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 53 வயதான இர்ஃபான் கான் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
புற்று நோய் காரணமாக அதிகமாக படங்களில் நடிக்காமலிருந்த அவர் பிரிட்டனில் சிகிச்சையிலிருக்கும் போது நடித்த ‘அங்க்ரேஸி மீடியம்’ திரைப்படம் ஊரடங்குக்கு முன் கடைசியாக வெளியானது குறிப்பிடத்தக்கது. இவரது பல்வேறு நடிகர்கள் இரங்கல் தெரிவித்து
வருகின்றனர்.
ஜெம் மருத்துவமனை மற்றும் இந்திய கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை சங்கம் சார்பில் தேசிய கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மாநாடு மற்றும் மேம்பட்ட மருத்துவ பயிற்சி
வி.ஜி.எம். அறக்கட்டளை மற்றும் கரூர் வைஸ்யா வங்கி இணைந்து அதிநவீன இரத்த வங்கியை தொடங்கியுள்ளது
சுந்தரி கிருஷ்ணகுமார் காலமானார்
விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய கேம்போர்டு இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள்
ஸ்கோடா பிராண்ட் இந்தியாவில் நன்கு வலுப்படுத்தி, 2025-ஆம் ஆண்டு ஒரு வளர்ச்சியின் ஆண்டாக உருவாகிவருகிறது
கோவையில் 3 நாட்கள் நடைபெறும் ஆசிய நுண்கலை நகை கண்காட்சி 2025 இன்று துவங்கியது !