• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

“பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்களை என்கவுன்ட்டர் செய்ய வேண்டும்” – அமைச்சர் ஜெயக்குமார்

April 16, 2018 தண்டோரா குழு

“பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்களை என்கவுன்ட்டர் செய்ய வேண்டும்” என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

காஷ்மீரில் 8 வயது சிறுமி கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில், விருதுநகரில் கல்லூரி பேராசிரியை கல்லூரி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அவர் பணி நீக்கம் செய்யபட்டார். இதையடுத்து, இந்த ஆசிரியையை கைது செய்ய கோரி கல்லூரி முன்பு போராட்டம் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த ஆசிரியை மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார்,

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்வோரை என்கவுண்டர் செய்ய வேண்டும் என ஆவேசமாக கூறினார். மேலும், மாணவிகளிடம் பேராசிரியை நிர்மலா தேவி பேசிய ஆடியோவை நானும் கேட்டேன். பேராசிரியர் நிர்மலா தேவி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்று தேசத்தில் இருக்கும் கருப்பு ஆடுகளை களையெடுக்க வேண்டும். மாணவிகளை தவறான பாதையில் அழைத்து செல்லும் பேராசிரியை நிர்மலாவின் அணுகுமுறைக்கு கண்டனம் தெரிவித்துள்ள அமைச்சர் அமைச்சர் ஜெயக்குமார் அதை ஒருபோதும் ஏற்க முடியாது என்றார்.

மேலும் படிக்க