• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாலியல் புகாருக்கு ரூ.3250 கோடி நஷ்டஈடு வழங்க ஒப்புக்கொண்ட பல்கலைக்கழகம் !

May 17, 2018 தண்டோரா குழு

அமெரிக்காவில் ஜிம்னாஸ்டிக் பயிற்சி பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய டாக்டர் லார்ரி நச்சாரி மீது தொடரப்பட்ட வழக்கில் மிக்சிகன் பல்கலைக்கழகம் ரூ.3250 கோடி நஷ்ட ஈடு வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள மிக்சிகன் பல்கலைக்கழகத்தில் ஜிம்னாஸ்டிக் விளையாட்டு பயிற்சி கழகத்தின் டாக்டராக பணிபுரிந்து வந்தவர் லார்ரி நஸ்சார். இவருடைய ஜிம்னாஸ்டிக் பயிற்சிக்கு அதிக வீராங்கனைகள் வருவதுண்டு. இந்நிலையில், இவர் ஜிம்னாஸ்டிக் பயிற்சிக்கு வந்த வீராங்கனைகளிடம் பாலியல் தொடர்பில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன.

இவரால் பாதிக்கப்பட்டதாக சுமார் 332 பெண்கள் புகார் அளித்தனர்.இதை தொடர்ந்து பல்கலைகழகம் அவரை பணிநீக்கம் செய்யப்பட்டது.

இது தொடர்பாக கலிபோர்னியா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில், மிக்சிகன் பல்கலைக்கழகம் இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வர விரும்பியது.

ஜிம்னாஸ்டிக் ஆசிரியர் டாக்டர் லார்ரி நஸ்சாரினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மிக்சிகன் பல்கலைக்கழக குழு தலைவர் பிரையன் பிரஸ்லின் ரூ.3250 கோடி நஷ்டஈடு வழங்குவதாக ஒப்புதல் அளித்தார்.

மேலும் படிக்க