• Download mobile app
01 Jun 2025, SundayEdition - 3399
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பாலக்காடு அருகே ரயிலில் அடிபட்டு ஆண் யானை பரிதாப சாவு

December 25, 2019

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் ஆண் யானை ஒன்று ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் வாளையாறு வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் இன்று அதிகாலை சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றது. அப்போது அவ்வழியாக வந்த ரயில் யானை மீது மோதியதில், யானை பரிதாபமாக பலியானது. இதுகுறித்து ரயில் பைலட் பாலக்காடு ரயில்வே போலீசார் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் அங்கு சென்ற அதிகாரிகள் யானையின் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சமீப காலமாக யானைகள் ரயிலில் மோதி உயிரிழக்கும் சம்பவம் அதிகரித்து வருகின்றது.

இந்த சூழலில், வனப்பகுதியை கடக்கும் போது ரயில்கள் மித வேகத்தில் இயக்க உத்தரவிடப்பட்டும் அதனை கடைபிடிப்பதில்லை என்று வன ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும் படிக்க