• Download mobile app
01 Mar 2026, SundayEdition - 3672
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாரூக் கொலை வழக்கில் சரணடைந்த மூவரையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி

March 23, 2017 தண்டோரா குழு

கோவையில் திராவிடர் விடுதலை கழகத்தை சேர்ந்த பாரூக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் சரணடைந்த மூன்று பேரையும் வெள்ளிக்கிழமை(மார்ச் 24) மாலை ஐந்து மணி வரை காவலில் எடுத்து விசாரிக்க 5-வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி செல்வக்குமார் உத்தரவிட்டார்.

கோவையில் கடந்த 16-ம் தேதி திராவிடர் விடுதலை கழகத்தை சேர்ந்த பாரூக் என்பவரை ஆறு பேர் கொண்ட கும்பல் வெட்டிக்கொலை செய்தது. இது தொடர்பாக அன்சர்த்,சதாம் உசேன்,சம்சூதீன் ஆகிய மூன்று பேர் கோவை நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

அதன் பின் பாரூக் கொலை தொடர்பாக அப்துல் முனாப்,அக்ரம் ஜிந்தா, ஜாபர் அலி ஆகியோர் சில தினங்களுக்கு முன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் நீதிமன்றத்தில் சரணடைந்த அன்சர்த், சதாம் உசேன்,சம்சூதீன் ஆகிய மூன்று பேரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்த காவல்துறையினர் மூவரையும் காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ள நேற்று (மார்ச் 22) நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

காவல்துறையினரின் விசாரணைக்கு சரணடைந்தவர்களின் வழக்கறிஞர் மறுத்ததால் அவர்கள் மீண்டும் இன்று(மார்ச் 23) நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

இந்நிலையில் , மூவரையும் கோவை பெரியகடைவீதி காவல்துறையினர் நாளை(மார்ச் 24) மாலை ஐந்து மணி வரை காவலில் எடுத்து விசாரிக்க ஐந்தாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி செல்வக்குமார் உத்தரவிட்டார். இதனையடுத்து மூவரையும் பெரியகடை வீதி காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச்சென்றனர்.

மேலும் படிக்க