• Download mobile app
15 May 2025, ThursdayEdition - 3382
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பாராலிம்பிக் கமிட்டியின் தமிழக சங்கத்தின் தலைமை அலுவலகம் திறப்பு

April 24, 2021 தண்டோரா குழு

பாராலிம்பிக் கமிட்டியின் தமிழக சங்கத்தின் தலைமை அலுவலக துவக்க விழா கோவையில் நடைபெற்றது.புதிய அலுவலகத்தை திறந்து வைத்து பேசிய தமிழ்நாடு பாராலிம்பி்க் தலைவர் இன்ஜினியர் சந்திரசேகர்,சர்வதேச அளவில் கோவையை சேர்ந்த வீரர்கள் சாதிக்கும் விதமாக பல்வேறு கட்டமைப்புகள் கோவையில் மேம்படுத்தப்படும் என தெரிவித்தார்.

ஒலிம்பிக் போட்டிகளுக்கு இணையான மாற்று திறனாளிகளுக்காக உலக அளவில் நடத்தப்படும்.பாராலிம்பிக் கமிட்டியின் தமிழக சங்கத்தின் தலைமை அலுவலக துவக்க விழா கோவையில் நடைபெற்றது.கோவை நேரு ஸ்டேடியம் அருகில் அமைந்துள்ள அலுவலகத்தை தமிழ்நாடு பாராலிம்பிக் தலைவர் இன்ஜினியர் சந்திரசேகர் திறந்து வைத்தார்.

தொடர்ந்து நடைபெற்ற விழாவில் பாராலிம்பிக் சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.தொடர்ந்து சர்வதேச,தேசிய போட்டிகளில் கலந்து கொண்டு சாதித்த மாற்றுத்திறனாளி வீரர்,வீராங்கனைகளுக்கு விருதுகள் வழங்கி பேசிய இன்ஜினியர் சந்திரசேகர், தமிழக பாராலிம்பிக் வீரர்கள் சாதிக்கும் விதமாக இந்த சங்கம் என்றுமே உறுதுணையாக இருக்கும் எனவும்,புதிதாக துவங்கப்பட்ட இந்த இடத்தில் பாராலிம்பிக் வீரர்கள் பயிற்சி பெறும் விதமான பிரத்யேக உபகரணங்கள் விரைவில் வழங்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து அவர்,பாராலிம்பிக்கில் சாதிக்க துடிப்பவர்கள்,முழுநேர பயிற்சிகளில் ஈடுபட்டாலும்,அன்றாட அவர்களின் வேலைகள் பாதிக்காத வகையில் வீடு தேடி சம்பளம் வரும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்படும் என அவர் தெரிவித்தார்.தொடர்ந்து அவர்,வரும் ஒலிம்பிக் போட்டிகளில் கோவை மாவட்டத்தை சேர்ந்த வீரர்கள் கட்டாயம் சாதிப்பார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.

விழாவில் தமிழ்நாடு பாராலிம்பிக் நிர்வாகிகள் ஆனந்தஜோதி,திருபாகர ராஜா, விஜயசாரதி, மற்றும் கோவை அத்லெட்டிக் சங்கத்தின் துணை தலைவர் ரத்னவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க