• Download mobile app
01 Dec 2025, MondayEdition - 3582
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாதுகாப்பு படை வீரர்கள் 2௦ பலி

April 24, 2017 தண்டோரா குழு

சட்டீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட்கள் நடத்திய தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் சுமார் 2௦ பேர் பலியாகியுள்ளனர்.

சட்டீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் குறித்து பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாதுகாப்பு படையினருக்கும் மாவோயிஸ்ட்கள் இடையே தாக்குதல் நடந்துள்ளது.

இந்த தாக்குதலில் பாதுகாப்பு படையினர் சுமார் 2௦ பேர் பலியாகியுள்ளனர். காயமடைந்த வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் காணமால் போன வீரர்களை தேடும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக அம்மாநில முதல்வர் உயர் மட்ட ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார். மேலும் இந்த தாக்குதல் தொடர்பாக மத்திய அரசுக்கு ஆய்வறிக்கை அனுப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாககியுள்ளது.

மேலும் படிக்க