June 28, 2019
தண்டோரா குழு
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு நாள்தோறும் மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கபட்ட இந்த மலை ரயிலில் பயணித்து, இயற்கை அழகை பயணிகள் கண்டு ரசிப்பது வழக்கம்.
இந்நிலையில் 130க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளுடன் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு மலை ரயில் புறப்பட்டு சென்றது. கல்லார் ரயில் நிலையத்தை சென்றடைந்த போது, ரயில் எஞ்சினில் கோளாறு ஏற்பட்டு பாதி வழியிலேயே நின்றது. இதுகுறித்து ரயில்வே உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, பழுது பார்க்கும் பணிகள் நடைபெற்றன.
எனினும், சீரமைக்க கூடுதல் நேரம் தேவைப்பட்டதால் ரயில் நிலையத்தில் பயணிகள் அனைவரும் இறக்கி விடப்பட்டனர். பின்னர் மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் இடையிலான ரயில் சேவை ரத்து செய்யபடுவதாக அறிவிக்கபட்டது.