• Download mobile app
06 Jun 2026, SaturdayEdition - 3769
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாடத்திட்டத்தில் சித்தர்கள் குறித்து பாடம் ?

February 11, 2021

தமிழகத்தில் ஆன்மீகம் மற்றும் சித்தர்கள் குறித்து குழந்தைகள் முதல் அனைவரும் அறிந்து கொள்ள பாடத்திட்டத்தில் அவற்றை இணைக்க வேண்டும் என கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் வலியுறுத்தப்பட்டது.

கோவை மருதமலை பாம்பாட்டி சித்தரின் திரு உருவப்படம் திறப்பு விழா நிகழ்ச்சி கல்வீரம்பாளையம் பகுதியில் நடைபெற்றது. ஓவியர் பருதிஞானம் என்பவரது கைவண்ணத்தில் உருவாக்கப்பட்ட இந்த ஓவியத்தை ஆன்மீக மடாதிபதிகளான, பிரேசில் ஆத்மநம்பி சுவாமிகள் ,உஜ்ஜயினி ஜுன்னா அகாதா மடாதிபதி பிரியாவ்ரத்பூரி சுவாமிகள்,போகர் பழனி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சிவானந்த புலிப்பானி மடாதிபதி ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமிகள் உள்ளிட்டோர் திறந்து வைத்தனர்.

முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமிகள்,

புகழ்பெற்ற மருதமலை பாம்பாட்டி சித்தரின் உருவப்படம் திறந்து வைத்துள்ளது மகிழ்ச்சியளிப்பதாகவும் சித்தர்கள் மற்றும் ஆழ்வாழ்வார்கள் இயற்றிய பல நூல்கள் பழைய பாடத்திட்டத்தில் இடம்பெற்றிருந்ததாகவும் ஆனால் தற்போது அவை பாடத்திட்டங்களிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் வருத்தம் தெரிவித்தார்.

மேலும் சித்தர்களின் வாழ்க்கை முறை மற்றும் ஆன்மீகத்தை பற்றி குழந்தைகள் முதல் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் எனவும் அதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுத்து பாடத்திட்டங்களில் ஆன்மீகம் குறித்த பாடங்களை சேக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். மேலும் எந்த மதத்தவரானாலும் பிற மதத்தவரை இழிவு படுத்துதல் என்வது தேவையற்ற செயல் எனவும் அதுபோன்ற செயல்கள ஈடுபடுவோர் மீது அரசு எவ்வித பாரபட்சமும் காட்டாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

மேலும் படிக்க