• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாஜக வடகிழக்கு – தென் மாநிலங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறது – பூனம் மகாஜன்

June 23, 2018 தண்டோரா குழு

பாஜக தென் மாநிலங்கள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் அதிக கவனம் செலுத்தி பணியாற்றி வருவதாக பாஜக இளைஞரணி தேசியத்தலைவர் பூனம் மகாஜன் தெரிவித்துள்ளார்.

கரூரில் நடைபெறும் பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணி கமிட்டிக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் கோவை வந்த அவர் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

தமிழக மக்கள் திறமை வாய்ந்தவர்கள். பாரதிய ஜனதா தலைமையிலான மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளது.

தமிழகத்திற்கு தேவையான பல திட்டங்களை செய்து வருகிறது. நான் தமிழகத்திற்கு மூன்றாவது முறையாக வருகிறேன். பாஜக இளைஞரணி நாட்டின் தென் மாநிலங்கள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் அதிக அக்கறை செலுத்தி பணியாற்றி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க