• Download mobile app
08 Jun 2025, SundayEdition - 3406
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பாஜகவின் அடிப்படை உறுப்பினர் கூட நாட்டின் பிரதமராகலாம் – வானதி சீனிவாசன்

August 2, 2019 தண்டோரா குழு

பாஜகவின் அடிப்படை உறுப்பினர் கூட நாட்டின் பிரதமராகலாம் என பாஜக மாநில துணைத் தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

மிஸ்டு கால் மூலம் உறுப்பினர் சேர்ப்பதற்கான பணியை பாரதிய ஜனதா கட்சி மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் பிரச்சார வாகனம் மூலம் உறுப்பினர் சேர்ப்பதற்கான நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை பாஜக மாநிலத் துணைத் தலைவர் வானதி சீனிவாசன் தொடங்கி வைத்தார்.

இதையடுத்து பாஜக தொண்டர்களிடையே பேசிய அவர்,

பாஜகவின் அடிப்படை உறுப்பினர் கூட நாட்டின் பிரதமராகலாம் எனக் கூறினார். நதிகளை தேசிய மயமாக்குவதில் பிரதமர் மோடி உறுதியாக இருப்பதாக கூறிய அவர், தமிழகமும் தேசியக் கட்சியின் பின்னால் நிற்க வேண்டும் என வலியுறுத்தினார். கோவை சிறுவர் சிறுமியர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு உச்ச நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கியிருப்பது மிகச் சரியான தீர்ப்பு என்றும் அவர் தெரிவித்தார். இதன் மூலம் நீதி நிலை நாட்டப்பட்டு இருப்பதாகவும் வானதி சீனிவாசன் கூறினார். வங்கிக்கடன் விவகாரத்தால் கோவை விவசாயி தற்கொலை செய்து கொண்டது குறித்து கருத்து தெரிவித்த அவர், இதுபோன்ற விவகாரங்களில் வங்கி நிர்வாகங்கள் கவனமுடன் செயல்பட வேண்டும் எனவும், எதற்கும் தற்கொலை தீர்வாகாது என பொதுமக்களும் விவசாயிகளும் புரிந்து கொள்ள வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்க