• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாசி நிறுவன வழக்கில் 2 பேருக்கு 27 ஆண்டு சிறை தண்டனை ரூ.171 கோடி 74 லட்சத்து 50 ஆயிரம் அபராதம்

August 26, 2022 தண்டோரா குழு

திருப்பூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட பாசி நிதி நிறுவனம் முதலீட்டாளர்களின் பணத்தை மோசடி செய்தது. இந்த வழக்கில் பாசி நிதி நிறுவன இயக்குனர்கள் கமலவள்ளி, மோகன்ராஜ், கதிரவன் ஆகியோரை கைது செய்து சிபிஐ விசாரணை நடத்தி வந்தது.

இந்த வழக்கில் 2013 ம் ஆண்டு சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த நிலையில் வழக்கு விசாரணையானது நடத்தப்பட்டது. மொத்தம் 1402 சாட்சிகளிடம் விசாரணையானது நடத்தப்பட்ட நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கு விசாரணையின் போது கதிரவன் உயிரிழந்து விட்ட நிலையில் பாசி நிதி நிறுவனத்தின் இயக்குநர்கள் கமலவல்லி மற்றும் மோகன்ராஜ் ஆகிய இருவரும் ஆஜராகினர்.

இந்த வழக்கில் தீரப்பளித்த நீதிபதி ரவி , கமலவள்ளி மோகன்ராஜ் ஆகிய இருவரும் குற்றவாளிகள் என அறிவித்தார்.நிதி நிறுவன இயக்குனர்கள் இருவருக்கும் 27 ஆண்டுகள் கடுங்காவல் தண்டணை விதித்த நீதிபதி, 171 .74 கோடி ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.மேலும் வழக்கை முழுமையாக விசாரிக்காத சிபிஐக்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.171.74 கோடி அபராத தொகையினை சாட்சியம் அளித்த 1402 பேருக்கு பிரித்து கொடுக்க வேண்டும் எனவும் நீதிபதி ரவி உத்திரவிட்டார்.

மேலும் பாசி நிதி நிறுவனத்தால் 58571 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், 930 கோடி மோசடி எனவும் என சிபிஐ குற்றபத்திரிகை செய்துள்ள நிலையில் 1402 பேரை மட்டும் ஆஜர்படுத்தி விட்டு மற்றவர்களை ஆஜர்படுத்தாததற்கு சிபிஐக்கு நீதிபதி ரவி கண்டனம் தெரிவித்தார்.இந்த வழக்கில் இனிமேல் பாதிக்க பட்டவர்கள் புகார் கொடுத்தால் சிபிஐ மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்களை தவிர்க்க கூடாது எனவும் நீதிபதி ரவி தனது தெரிவித்தார்.

மேலும் படிக்க