April 11, 2017
தண்டோரா குழு
இந்திய உளவாளி என்று குற்றம்சாட்டப்பட்டவருக்கு பாகிஸ்தான் அரசு மரண தண்டனை விதித்துள்ளது. ஆனால், பாகிஸ்தான் உளவாளியை போபால் அரசு மனித நேயத்தோடு நடத்தி வருகிறது.
இந்தியாவை சேர்ந்த குல்புஷன் ஜாதவ் என்பவருக்கு பாகிஸ்தான் அரசு மரண தண்டனையை விதித்துள்ளது. அவர் உளவாளி என்று குற்றம்சாட்டப்பட்டு இந்த தண்டனை அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு இந்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த சஜீத் முனீர் என்பவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டு 12 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து, விடுதலை ஆன பிறகும் போபால் காவல்துறையினர் தங்கள் சொந்த செலவில் அவரை நன்கு பராமரித்து வருகின்றனர்.
அவர் தற்போது போபாலில் உள்ள கோ ஈ பிஸா காவல் நிலையத்தில் உள்ளார். அவருடைய உணவு மற்றும் இதர பொருள்களை காவலர்களே வாங்கி தருகின்றனர்.
போபால் காவல்துறையினர் சஜீத்தை மீண்டும் பாகிஸ்தானுக்கு அனுப்ப வேண்டும் என்று தலைமை அலுவலக அதிகாரிகளுக்கு தொடர்ந்து மனு அனுப்பிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் எந்த பயனும் இல்லை. இது குறித்து வெளிவிவகார அமைச்சகத்திற்கு நினைவூட்டு கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளனர்.