• Download mobile app
08 May 2025, ThursdayEdition - 3375
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பாகிஸ்தான் உளவாளியை மனித நேயத்தோடு நடத்தும் இந்தியா

April 11, 2017 தண்டோரா குழு

இந்திய உளவாளி என்று குற்றம்சாட்டப்பட்டவருக்கு பாகிஸ்தான் அரசு மரண தண்டனை விதித்துள்ளது. ஆனால், பாகிஸ்தான் உளவாளியை போபால் அரசு மனித நேயத்தோடு நடத்தி வருகிறது.

இந்தியாவை சேர்ந்த குல்புஷன் ஜாதவ் என்பவருக்கு பாகிஸ்தான் அரசு மரண தண்டனையை விதித்துள்ளது. அவர் உளவாளி என்று குற்றம்சாட்டப்பட்டு இந்த தண்டனை அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு இந்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த சஜீத் முனீர் என்பவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டு 12 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து, விடுதலை ஆன பிறகும் போபால் காவல்துறையினர் தங்கள் சொந்த செலவில் அவரை நன்கு பராமரித்து வருகின்றனர்.

அவர் தற்போது போபாலில் உள்ள கோ ஈ பிஸா காவல் நிலையத்தில் உள்ளார். அவருடைய உணவு மற்றும் இதர பொருள்களை காவலர்களே வாங்கி தருகின்றனர்.

போபால் காவல்துறையினர் சஜீத்தை மீண்டும் பாகிஸ்தானுக்கு அனுப்ப வேண்டும் என்று தலைமை அலுவலக அதிகாரிகளுக்கு தொடர்ந்து மனு அனுப்பிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் எந்த பயனும் இல்லை. இது குறித்து வெளிவிவகார அமைச்சகத்திற்கு நினைவூட்டு கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளனர்.

மேலும் படிக்க