• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாகிஸ்தானில் நிலநடுக்கம் 6.3 ரிக்டர் அளவு பதிவு

February 8, 2017 தண்டோரா குழு

பாகிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் புதன்கிழமை (பிப்ரவரி 8) ஏற்பட்டது. இது 6.3 ரிக்டர் அளவுகோலாகப் பதிவாகியுள்ளது.

இது குறித்து அமெரிக்க நாட்டின் புவியியல் ஆய்வு நிலைய அதிகாரி கூறியதாவது:

“பாகிஸ்தான் நாட்டின் அரேபிய கடற்கரைப் பகுதியில் புதன்கிழமை அதிகாலையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள க்வாதார் துறைமுகத்திற்கும் பலுசிஸ்தான் மாகாணத்தின் பஸ்னி நகருக்கு இடையே மையம் கொண்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் துர்பாத் என்னும் நகரின் தென் பகுதி 9௦ கிலோமீட்டர் தூரத்தில் 1௦ கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது.

இது ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளது. இது ஆரம்பத்தில் 6.6 ரிக்டராக இருந்திருக்கும் என்று கருதப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச் சேதமோ பொருட்சேதமோ ஏற்படவில்லை. இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் பிறப்பிக்கப்படவில்லை”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பஸ்ன நாட்டின் மக்கள் தொகை 400,000 ஆகும். நிலநடுக்கம் ஏற்படும் பகுதியில் பாகிஸ்தான் அமைந்துள்ளதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது. 2௦13ம் ஆண்டு பலுசிஸ்தான் நாட்டில் ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கத்தில் 1,2௦௦ பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க