விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளராக பதவி ஏற்றுள்ள புஸ்ஸி ஆனந்த் சமூக பணி சிறக்க வேண்டி கோவையில் விஜய் மக்கள் இயக்க குறிச்சி நகர இளைஞரணியினர் பழனி யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் மற்றும் மளிகை பொருட்கள் வழங்கினர்.
விஜய் மக்கள் இயக்கத்தின் பொறுப்பாளராக செயல்பட்டு வந்த புஸ்ஸி ஆனந்த் அண்மையில் பொது செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் அவரது பணி சிறக்க வேண்டி கோவையில் விஜய் மக்கள் இயக்கத்தின் குறிச்சி நகர இளைஞரணி சார்பாக பழனிக்கு பாத யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் இலவச மளிகை பொருட்கள் வழங்கும் விழா கோவை உக்கடம் புல்லுக்காடு பகுதியில் உள்ள மதுரை வீரன் பட்டத்தரசியம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்றது. கோவை மாவட்ட விஜய் மக்கள் இயக்க இளைஞரணி தலைவர் விஜய் யுவராஜ் அறிவுறுத்தலின் படி நடைபெற்ற இதில் குறிச்சி நகர இளைஞரணி தலைவர் ஃபைசல் தலைமை தாங்கினார்.செயலாளர் முகம்மது அலி,பொருளாளர் இரும்பு கடை அக்கீம்,அமைப்பாளர் சிவபாலன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக சுகுணா புரத்தை சேர்ந்த இந்தியன் வுட் வொர்க் குப்புராஜ் கலந்து கொண்டு பழனி மலைக்கு பாத யாத்திரை செய்யும் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் இலவச மளிகை பொருட்களை வழங்கினார்.
இது குறித்து குறிச்சி நகர இளைஞரணி நிர்வாகிகள் பேசுகையில்,
விஜய் மக்கள் இயக்கத்தில் எங்களது தேசிய பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த்தின் ஆக்கபூர்வமான பணி மேன்மேலும் சிறக்க இது போன்ற நல்ல செயல்களை செய்வதாகவும்,இனி இது போன்று பல்வேறு நலத்திட்டங்கள் செய்ய உள்ளதாகவும் தெரிவித்தனர். நிகழ்ச்சியில் குறிச்சி நகர இளைஞரணி நிர்வாகிகள் சந்தோஷ் மெர்சல் செந்தில், மாஸ்டர் செந்தில், ரமேஷ் ரபீக், ஆசிக், ஹரிதாஸ், சலீம் குமார், ரியாஸ், ஆசிப், துரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஜெம் மருத்துவமனை மற்றும் இந்திய கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை சங்கம் சார்பில் தேசிய கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மாநாடு மற்றும் மேம்பட்ட மருத்துவ பயிற்சி
வி.ஜி.எம். அறக்கட்டளை மற்றும் கரூர் வைஸ்யா வங்கி இணைந்து அதிநவீன இரத்த வங்கியை தொடங்கியுள்ளது
சுந்தரி கிருஷ்ணகுமார் காலமானார்
விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய கேம்போர்டு இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள்
ஸ்கோடா பிராண்ட் இந்தியாவில் நன்கு வலுப்படுத்தி, 2025-ஆம் ஆண்டு ஒரு வளர்ச்சியின் ஆண்டாக உருவாகிவருகிறது
கோவையில் 3 நாட்கள் நடைபெறும் ஆசிய நுண்கலை நகை கண்காட்சி 2025 இன்று துவங்கியது !