• Download mobile app
16 Jun 2025, MondayEdition - 3414
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

பழனி யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம்

January 23, 2021 தண்டோரா குழு

விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளராக பதவி ஏற்றுள்ள புஸ்ஸி ஆனந்த் சமூக பணி சிறக்க வேண்டி கோவையில் விஜய் மக்கள் இயக்க குறிச்சி நகர இளைஞரணியினர் பழனி யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் மற்றும் மளிகை பொருட்கள் வழங்கினர்.

விஜய் மக்கள் இயக்கத்தின் பொறுப்பாளராக செயல்பட்டு வந்த புஸ்ஸி ஆனந்த் அண்மையில் பொது செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் அவரது பணி சிறக்க வேண்டி கோவையில் விஜய் மக்கள் இயக்கத்தின் குறிச்சி நகர இளைஞரணி சார்பாக பழனிக்கு பாத யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் இலவச மளிகை பொருட்கள் வழங்கும் விழா கோவை உக்கடம் புல்லுக்காடு பகுதியில் உள்ள மதுரை வீரன் பட்டத்தரசியம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்றது. கோவை மாவட்ட விஜய் மக்கள் இயக்க இளைஞரணி தலைவர் விஜய் யுவராஜ் அறிவுறுத்தலின் படி நடைபெற்ற இதில் குறிச்சி நகர இளைஞரணி தலைவர் ஃபைசல் தலைமை தாங்கினார்.செயலாளர் முகம்மது அலி,பொருளாளர் இரும்பு கடை அக்கீம்,அமைப்பாளர் சிவபாலன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக சுகுணா புரத்தை சேர்ந்த இந்தியன் வுட் வொர்க் குப்புராஜ் கலந்து கொண்டு பழனி மலைக்கு பாத யாத்திரை செய்யும் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் இலவச மளிகை பொருட்களை வழங்கினார்.

இது குறித்து குறிச்சி நகர இளைஞரணி நிர்வாகிகள் பேசுகையில்,

விஜய் மக்கள் இயக்கத்தில் எங்களது தேசிய பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த்தின் ஆக்கபூர்வமான பணி மேன்மேலும் சிறக்க இது போன்ற நல்ல செயல்களை செய்வதாகவும்,இனி இது போன்று பல்வேறு நலத்திட்டங்கள் செய்ய உள்ளதாகவும் தெரிவித்தனர். நிகழ்ச்சியில் குறிச்சி நகர இளைஞரணி நிர்வாகிகள் சந்தோஷ் மெர்சல் செந்தில், மாஸ்டர் செந்தில், ரமேஷ் ரபீக், ஆசிக், ஹரிதாஸ், சலீம் குமார், ரியாஸ், ஆசிப், துரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க