• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பள்ளி மாணவிகள் வாந்தி மயக்கம்,எதிரொலியாக மாவட்ட முழுவதும் சிறப்பு காய்ச்சல் முகாம்

September 22, 2022 தண்டோரா குழு

கோவையில் பள்ளி மாணவிகள் 9பேர் வாந்தி மயக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் சிறப்பு காய்ச்சல் முகாம் அமைத்து தீவிர பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பள்ளியில் 9மாணவிகள் மயக்கம் ,வாந்தி, எதிரொலியாக ஆட்சியர் சமீரன் உத்தரவின்பேரில் கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் முகாம்கள் அமைத்தும், வீடு வீடாக சுகாதாரத்துறை செவிலியர்கள் சென்று சிறப்பு காய்ச்சல் பரிசோதனை செய்து வருகின்றனர்.கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒரே வகுப்பைச் சேர்ந்த 9 மாணவிகள் திடீர் வாந்தி மயக்கம் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து கோவை மாவட்டம் முழுவதும் சிறப்பு காய்ச்சல் முகாம் அமைத்து பரிசோதனை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டார்.இதனை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் 238 சிறப்பு காய்ச்சல் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் வட்டாரத்திற்கு 14 முகாம்கள் வீதம் 12 வட்டாரங்களில் மொத்தம் 168 முகாம்களும் மாநகராட்சிப் பகுதிகளில் 70 முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த முாகமிற்காக 71 குழுக்கள் பணியமர்த்தப்பட்டு இந்த குழுவில் ஒரு மருத்துவ அலுவலர் , செவிலியர் , மருந்தாளுநர் மற்றும் களப்பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் மூலம் பள்ளி மாணவர்கள் மற்றும் பொது மக்களுக்கு காய்ச்சல் அறிகுறிகள் உள்ளதா என வீடு வீடாக சென்று வெப்பநிலை கருவி மூலம் பரிசோதிக்கப்பட்டு , உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.மேலும் கொசு மருந்து புகையை அடிக்கும் பணியையும் தீவிரப்படுத்தியுள்ளன.மேலும் இந்த முகாம்கள் தொடர்ந்து நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க