• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பள்ளி மாணவர்களுடன் மதிய உணவு சாப்பிட்ட கோவை மாவட்ட ஆட்சியர் !

March 19, 2022 தண்டோரா குழு

போலாம் ரைட் என்ற தலைப்பில் அரசு பள்ளி மாணவர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலுக்கு பின்பு மதிய உணவு உட்கொண்டார்.

அரசுப்பள்ளி மாணவர்கள் சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிகளுக்கு திரும்பியுள்ள நிலையில், அவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியருடன் காபி வித் கலெக்டர் என்ற தலைப்பிலான கலந்துரையாடல் கூட்டம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.தேர்வு செய்யப்பட்ட 50 அரசுப்பள்ளி மாணவ மாணவிகள்,இதில் கலந்து கொண்டு கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரனிடம் கேள்விகளை எழுப்பினர்.

இதை தொடர்ந்து பேருந்து மூலமாக மாணவர்களுடன் கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்திற்கு அவர் பயணித்தார். அப்போது மாணவர்கள் போலாம் ரைட் என்ற உற்சாக குரல் எழுப்பினர். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மாணவ மாணவிகளுடன் பூச்சியியல் அருங்காட்சியகத்தை பார்த்தவர். அங்கிருந்து அரசு மருத்துவக்கல்லூரிக்கு சென்றனர்.
அரசு மருத்துவக்கல்லூரியில் வகுப்பறைகள், பாடத்திட்டம் குறித்து தெரிந்து கொண்ட மாணவ மாணவிகளுடன் ஆட்சியர் அங்கேயே மதிய உணவை சாப்பிட்டார்.

மேலும் படிக்க