• Download mobile app
16 May 2024, ThursdayEdition - 3018
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பள்ளி கட்டிடம் இடிந்தது : 20 பேர் சிக்கியுள்ளதாக தகவல்

April 13, 2017 தண்டோரா குழு

வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே புதிதாக கட்டப்பட்டு வந்த பள்ளி கட்டிடம் திடீரென இடிந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள கோரந்தாங்களில் புதிதாக பள்ளி கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது.இங்கு கட்டிடப் பணி இன்றும் நடைபெற்று வந்தது.இந்நிலையில், கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. அப்போது 20 பேர் கட்டிட பணியில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.

இது குறித்து அருகில் உள்ள தீயணைப்பு துறைக்கு தகவல் அனுப்பப்பட்டது.தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள், கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பள்ளி கட்டிட விபத்தில் சிக்கிய 3 பேரை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். பின்னர் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.தொடர்ந்து தீயணைப்பு துறை வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க