• Download mobile app
17 May 2025, SaturdayEdition - 3384
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பல லட்சம் மதிப்பிலான நகைகள் காரில் தவற விட்ட பெண் – காவல்துறை விசாரணை

February 20, 2021 தண்டோரா குழு

கோவை சாய்பாபா காலணி பகுதியை சேர்ந்தவர் பாபி. இவர் சிசி டிராவல்ஸ் என்ற பெயரில் கால் டாக்சி நிறுவனம் வைத்து உள்ள இவர் கோ டேக்சி, ஊபர் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகிறார்.

நேற்று காலை இவரது வாகனத்தை கோல்டுவின்ஸ் இருந்து கே.ஜி.மருத்துவமனை செல்ல வாகனம் வேண்டும் என கேட்டு நபர் ஒருவர் காலை 9 மணிக்கு காரை வாடகை எடுத்துள்ளார்.அதில் பெண்கள் உட்பட நான்கு பேர் பயணித்து உள்ளனர். அவர்களை மருத்துவமனையில் இறக்கிவிட்ட பிறகு பல்வேறு வாடகைகளை எடுத்துவிட்டு இரவு 9 மணியளவில் ஓட்டுனரும் காரின் உரிமையாளுருமான பாபு வீட்டிற்கு சென்றுள்ளார்.

வீட்டில் இருந்தபோது காலை வாகனத்தில் பயணித்த பயணி அலைபேசி மூலம் தொடர் கொண்டு ஏதாவது பை தங்களது காரில் உள்ளதா என கேட்டு உள்ளார். பார்த்து சொல்வதாக பாபு கூறிவிட்டு காரின் டிக்கியை சோதனை செய்தபோது பிக் ஷாப்பர் பை இருப்பதை கண்ட அவர் காரின் டிக்கியில் பை ஒன்று இருப்பதாகவும் அது உங்களுடையதா எனவும் அதில் என்ன இருக்கிறது பையின் அடையாளங்களை கூறுமாறு கேட்டு உள்ளார்.

மேலும் ஏதாவது விலை உயர்ந்த பொருட்கள் உள்ளதா என சும்மா கேட்ட போது துணிமணிகள் மட்டுமே உள்ளதாக தெரிவித்து உள்ளனர். பையை திறந்து பார்த்தபோது பல லட்ச ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் இருப்பதை கண்ட காரின் உரிமையாளர் இது குறித்து ஓட்டுனர் சங்க நிர்வாகிகளிடம் தெரிவித்து உள்ளார். காலை அந்த பையுடன் மாநகர காவல் ஆணையர் அலுவலத்தில் ஒப்படைக்க வந்த அவரிடம் போலீசார் விசாரனை மேற்கொண்டதுடன் பையை தவறவிட்ட நபரை காவல் நிலையம் வர சொல்லி அழைத்துள்ளனர்.

மேலும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பல லட்ச ரூபாய் மதிப்பிலான நகைகள் காரில் தவறவிட்ட நிலையில் துணிமணிகள் மட்டுமே உள்ளது என கூறியுள்ளதால் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க