• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பல ஆண்டுக்கு பிறகு வடகொரியா சென்ற இந்திய அமைச்சர்

May 17, 2018 தண்டோரா குழு

இருபது ஆண்டுகளுக்கு பிறகு வடகொரிய சென்ற இந்திய பிரதிநிதியாக வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.கே.சிங் சென்றார்.

செப்டம்பர் 1998இல்,இருந்த தேசிய ஜனநாயக கூட்டணி அமைச்சரவையில் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சராக இருந்தவர் முக்தர் அப்பாஸ் நக்வி.அவர் ஒரு திரைப்பட விழாவிற்காக வடகொரிய தலைநகர் பியாங்யாங் சென்றார்.

அதன் பின் 20 வருடங்களாக இந்தியாவில் இருந்து யாரும் செல்லவில்லை . தற்போது இந்திய வெளியுறவு இணை அமைச்சரும் முன்னாள் ராணுவத் தளபதியுமான வி.கே.சிங்-யும் பயணம் மேற்கொண்டுள்ளனர்.வி.கே.சிங் வடகொரியாவின் மூத்த அமைச்சர் மற்றும் அதிகாரிகளை சந்தித்தார். இந்த இரண்டு நாட்களும் வி.கே.சிங் அவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் இந்திய மற்றும் வடகொரிய இரு நாட்டிற்கும் இடையே உள்ள அரசியல்,கலாசாரம் மற்றும் கல்வி ஆகியவற்றை பற்றி விவாதம் பேசினார்கள்.

மேலும் படிக்க