• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பயணிகள் ரயில் கட்டண உயர்விற்கு பி.ஆர்.நடராஜன் எம்பி கண்டனம்

November 10, 2021 தண்டோரா குழு

கோவையில் இருந்து பழனிவரை செல்லும் பயணிகள் ரயில் கட்டண உயர்விற்கு கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கோவை மாவட்டம் கல்விநிலையங்கள், சிறுகுறு நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் வர்த்தக தலைநகராக உள்ளது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் கோவை மாவட்டத்திற்குள் வருவதும், செல்வதுமாக உள்ளனர். இதன்காரணமாக அதிகப்படியான வருவாயை நமது கோவை ரயில்வே துறை ஈட்டி வருகிறது.

இரண்டு முறை கோவை நாடாளுமன்ற உறுப்பினராக மக்களின் ஆதரவை பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டதால் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பல்வேறு வசதிகள் கோவை ரயில்நிலையம் மற்றும் வடகோவை ரயில்நிலையத்திற்கு செய்து தரப்பட்டது. மேலும் எனது தொடர் முயற்சியின் காரணமாக பல்வேறு ரயில் சேவைகள் கோவையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு இந்த சேவை நீட்டிக்கப்பட்டது.

மேலும் நமது கோவை ரயில் நிலையத்தை ஆதார் அந்தஸ்த்து பெற முடிந்தது. இந்நிலையில் கொரோனா பெருந்தொற்று காரணமாக பல ரயில்களின் சேவை நிறுத்தப்பட்டது. தற்போது கொரோனா தாக்கம் குறைந்துள்ள நிலையில் அனைத்து பயணிகள் ரயில்களை இயக்க வேண்டும் என கடந்த மாதம் ரயில்வேதுறைக்கு கடிதம் எழுதியிருந்தேன்.

இந்த கோரிக்கையை ஏற்று தற்போது அடுத்தடுத்த ரயில்கள் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு இயக்கப்படுகிறது. தற்போது கோவை – பழனிக்கு பயணிகள் இரயிலை சேவை துவக்கப்பட்டுள்ளது.ரயில்வேதுறையின் இந்த நடவடிக்கையை கோவை மக்களின் சார்பில் வரவேற்கிறேன். அதேநேரத்தில் பயண கட்டணத்தை உயர்த்தியிருப்பது கண்டிக்கத்தக்கது. இது ஏற்கனவே கொரோன பதிப்பால் வேலையின்மை, வருவாய் இழப்பு போன்ற துயரத்தில் உள்ள மக்களை வெகுவாக பாதிக்கும்.

கோவை முதல் பழனி வரையில் செல்லும் ரயில் சேவைக்கு பயண கட்டணத்தை 10 ரூபாயில் இருந்து 30 ரூபாயாக உயர்த்தி உள்ளது பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு சுமையேற்றும் நடவடிக்கையாகும். உடனடியாக இந்த கட்டண உயர்வை ரயில்வே நிர்வாகம் திரும்ப பெற்று முந்தைய கட்டணத்தையே நிர்ணயிக்க வேண்டும். மேலும், அனைத்து ரயில் சேவைகளையும் விரைந்து இயக்கிட ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்க